5ம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.!

5ம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.!

Update: 2021-02-07 16:01 GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது. கடந்த 16.02.2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவர் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை சோதனைகளை சந்தித்து வருகிறார். ஆட்சி மூன்று மாதங்களில் கலைந்து விடும்.. ஆறு மாதங்களில் கலைந்து விடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார்.

ஆனால் ஸ்டாலின் பேசியது எல்லாமே பொய்யாகவே முடிந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். தமிழகத்திற்கு என்று பல விருதுகளை வாங்கியுள்ளார்.

அதுவும் கொரோனா காலங்களில் மிகவும் சிறப்பாக பணியாற்றி அனைத்து மக்களுக்கும் உணவுகள் கிடைப்பதற்கு தமிழக அரசு வழிவகை செய்தது.
இந்நிலையில், 5ம் ஆண்டில் அரசு அடியெடுத்து வைப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Similar News