பிரதமர் மோடி தலைமையில் அதிகாரம் படைத்த நாடாக மாறி வரும் இந்தியா - ஜே.பி. நட்டா பெருமிதம்!

Update: 2022-05-06 00:11 GMT

பிரதமர் மோடி தலைமையில் மாறி வரும் இந்தியா என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

தெற்கு டெல்லியில் நேற்று (மே 4) மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அதன் பின்னர் அங்கு இருந்த கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா மாறி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா காலக்கட்டத்தில் இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி சென்றார். மேலும், உக்ரைனில் போர் நடைபெற்றும் வரும் சூழலில் இந்திய மாணவர்களை அனைவரையும் பத்திரமாக காப்பாற்றி தாய்நாட்டிற்கு அழைத்து வந்தார். அது மட்டுமின்றி மனிதாபிமான முறையில் மற்ற நாட்டு மாணவர்களையும் மீட்டுக் கொண்டு வந்த பெருமை அவரை சாரும்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் அனைத்து வகையிலான மக்கள் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. எனவே இது மாறி வரும் இந்தியா. பிரதமர் மோடிஜியின் அதிகாரம் படைத்த இந்தியா என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News