தமிழகத்தில் வலுப்பெறுகிறதா என்.ஐ.ஏ அமைப்பு - அமித்ஷாவிடம் அண்ணாமலை விடுத்த அதிரடி கோரிக்கை!

தமிழகத்தில் என்.ஐ.ஏ'வை வலுப்படுத்த வேண்டும் என அமித்ஷாவிடம் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-11-13 14:08 GMT

தமிழகத்தில் என்.ஐ.ஏ'வை வலுப்படுத்த வேண்டும் என அமித்ஷாவிடம் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

காசி தமிழ் சங்கத்தில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 2400 பேர் 12 ரயில்களில் பயணிக்க உள்ளதாகவும். வாரணாசியில் வரும் 19ஆம் தேதி அன்று முதல் குழுவை பிரதமர் மோடி வரவேற்பார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் பேட்டியளித்தவர், தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை வலுப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.


Source - Polimer News

Similar News