மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம்.!
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுக அழைப்பது சிறுமைப்படுத்துவதாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுக அழைப்பது சிறுமைப்படுத்துவதாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்த பின்னர் மத்திய அரசை சிறுமைப்படுத்துவதாக செயல்பாடுகள் அமைந்துள்ளது. ஒன்றிய அரசு என்று முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை பேசி வருகின்றனர். இது போன்று பேசுவது ஏற்பதல்ல என பலர் திமுகவுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இது பற்றி கூறியதாவது: மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல, இந்திய நாடு பிரிக்க முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் எனக்குறிப்பிட்டுள்ளார்.