மக்கள் நீதி மய்யம் பொருளாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.8 கோடி பறிமுதல்.!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளர் சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.8 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-03-18 03:48 GMT

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளர் சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.8 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களார்களுக்கு பணம் கொடுப்பதற்காக திமுக, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே அதே போன்று திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அது போன்று அனிதா ஹெல்த்கேர் மற்றும் அனிதா டெஸ்காட் ஆகிய 2 நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று தமிழகத்தில் பிற இடங்களிலும் சோதனை நடைபெறும் என்ற அச்சத்தில் திமுக கூட்டணி கட்சியினர் உள்ளனர்.

Similar News