"கஷ்டம் என கேட்டார்கள் உதவி செய்தேன்" - புகார் தொடர்பாக ஜெயலட்சுமி விளக்கம் !

Breaking News.

Update: 2021-09-16 12:30 GMT

"கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் பணம் கொடுத்தேன்" என பா.ஜ.க'வை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி தன் மேல் உள்ள புகாருக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க'வை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி வட்டி கேட்டு தொல்லை செய்கிறார், இரவில் ஆண்களை அனுப்புகிறார் என அவதூறு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை ஜெயலட்சுமி அதில் அவர் கூறியதாவது, "கீதா என்பவரை தனக்கு 2019'ம் ஆண்டு அறிமுகமானதாகவும், ஊரடங்கு காரணமாக தன்னுடைய சுய உதவி குழுவில் உள்ள பெண்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும், குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளதாக கூறினார்.

எனவே கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே, கீதாவின் குழுவில் இருந்த பெண்களுக்கு 17.50 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தேன். இந்த பணத்தை 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்தால் வட்டி தேவையில்லை என்று கூறினேன். ஆனால் நான் கொடுத்த பணத்தை கீதா குழுவில் உள்ள மற்ற பெண்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இப்போது பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.



Source - Polimer

Tags:    

Similar News