'காங்கிரஸில் இருக்க விருப்பமில்லை' - 25 வருட தொடர்பை முறித்த கர்நாடக மூத்த தலைவர்!

Update: 2022-06-03 04:10 GMT

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் கடந்த 25 வருடங்களாக பணியாற்றிய மூத்த தலைவர் பிரிஜேஷ் கலப்பா திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர் பிரிஜேஷ் கலப்பா திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கபில் சிபல் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்தார்.

இந்நிலையில், தற்போது அதே போன்று கர்நாடகா காங்கிரஸில் இருந்தும் ஒருவர் விலகியிருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இது பற்றி பிரிஜேஷ் கலப்பா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கட்சியின் நலனுக்காக உழைப்பதற்கான ஆர்வத்தை கட்சி வழங்கவில்லை எனவே இந்த கட்சியில் இனிமேல் தொடருவதற்கு விருப்பம் இல்லை, இதன் காரணமாக விலகுகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News