தி.மு.க.விற்கு ஓட்டு போட்டால் உங்களுடைய சொத்து காணாமல் போயிடும்.. கரூர் பரப்புரையில் முதலமைச்சர் பேச்சு.!

ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால், ஓட்டல் முதலாளி மீது மூக்கின் மீது குத்துகின்றனர். இது போன்ற கட்சிக்கு ஓட்டு போட்டீர்கள் என்றால் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் பெருகிவிடும்.

Update: 2021-03-24 05:29 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை கரூர் நகரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் எட்பபாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, கரூர் மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அதிமுக அரசு செய்யவில்லை என்று கூறி வருகிறார்.




 


இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டாலின் எந்த அளவிற்கு பொய் பேசி வருகிறார் என்று, அது மட்டுமின்றி திமுகவினர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால், ஓட்டல் முதலாளி மீது மூக்கின் மீது குத்துகின்றனர். இது போன்ற கட்சிக்கு ஓட்டு போட்டீர்கள் என்றால் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் பெருகிவிடும்.




 


மேலும், உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது திமுகவினர் அபகரித்து விடுவார்கள். எனவே உங்கள் சொத்து உங்களிடம் இருக்க வேண்டும் என்றால் அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Similar News