"சிலர் இருப்பை காட்டிக்கொள்ள அரசு மீது குறைகூறுகிறார்கள்!" ஜோதிமணியை வம்பிழுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி!

கரூர் மாவட்டத்தில் சிலர் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் மீது குறை கூறுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அமைச்சர் செந்தில்பாலாஜி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2021-12-04 13:00 GMT

கரூர் மாவட்டத்தில் சிலர் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் மீது குறை கூறுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அமைச்சர் செந்தில்பாலாஜி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு சிலர் தாங்கள் இருப்பதை காட்டிக்கொள்வதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மீது குறை கூறுகின்றனர் என்றார். செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தான் இருப்தைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

அதாவது சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். மத்திய அரசு பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை எனற குற்றச்சாட்டை ஜோதிமணி முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Vikatan


Tags:    

Similar News