முதல்வரை தூங்கவிடாமல் செய்த காசி தமிழ் சங்கமம் - 'அரிதாரங்கள் பூசி வந்தா போதுமா?' என ஆதங்க அறிக்கை

'ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும் விழித்துவிட்ட தமிழ்நாட்டை வீழ்த்திட முடியாது' என காசி தமிழ் சங்கமும் நிகழ்ச்சி குறித்து சூசகமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2022-11-20 14:19 GMT

'ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும் விழித்துவிட்ட தமிழ்நாட்டை வீழ்த்திட முடியாது' என காசி தமிழ் சங்கமும் நிகழ்ச்சி குறித்து சூசகமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் மத்திய அரசின் சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது. இதற்காக தமிழ்நாட்டிலிருந்து உத்தரபிரதேச வாரணாசி நகருக்கு தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மிகப்பெரும் மகிழ்ச்சி நடத்தப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழகத்தில் இருந்து இசைஞானி இளையராஜா எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இது குறித்து சூசகமாக கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, 'அரசியல் உரிமைகளை வென்றெடுத்த நீதிக்கட்சி உருவாக்கிய பாதை வரலாறு காட்டும் வெளிச்சம் ஆகியவற்றை ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும் விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது' என அவர் பதிவிட்டுள்ளார்.


Source - Asianet News 

Similar News