"மத்திய அரசை பாராட்ட பி.டி.ஆருக்கு மனமில்லை" - வானதி ஸ்ரீனிவாசன் !

Breaking News.

Update: 2021-08-21 15:15 GMT

அ.தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிவதிலேயே தி.மு.க அரசு நேரம் செலவிடுவதாக பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் வானதி ஸ்ரீனிவாசன். அதனுடன் 'மோடி மகள் நலத்திட்ட உதவிகள்' வழங்கும் விழாவும் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதேநேரம் அ.தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிவதிலேயே தி.மு.க அரசு நேரம் செலவிடாமல் ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளிலும் நேரத்தை செலவிடலாம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "மக்களின் நலத் திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கும் விஷயத்தில், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசை பாராட்ட மனம் இல்லாமல் இருக்கிறார். எந்தெந்த திட்டங்களுக்காக மத்திய அரசு, மாநில அரசின் வாயிலாக நிதிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அமைச்சர் விளக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News