ராகுல் காந்தியிடம் பெண்கள் உஷாராக இருங்க.. முன்னாள் எம்.பி. பேச்சு.!

இடுக்கி எம்.பி., ஜார்ஜ், பேசியதாவது: ராகுல் காந்தி மகளிர் கல்லூரிகளுக்கு மட்டுமே வருவார் என்றும், எனவே ராகுல் காந்தியுடன் பழகும்போது பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார்.

Update: 2021-03-30 10:35 GMT

சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தற்போது கேரளாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் எம்.பி., ஜாய்ஸ் ஜார்ஜ் கொச்சியில் நடந்த மகளிர் கலந்துரையாடலில் ராகுல் காந்தி பங்கேற்றது குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

இடுக்கி எம்.பி., ஜார்ஜ், பேசியதாவது: ராகுல் காந்தி மகளிர் கல்லூரிகளுக்கு மட்டுமே வருவார் என்றும், எனவே ராகுல் காந்தியுடன் பழகும்போது பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார்.


 



மேலும், பெண்கள் ஒருபோதும் அவருக்கு முன்னால் குனிய மாட்டார்கள். அவர் திருமணமாகாத பிரச்சனையை உருவாக்கும் நபர், என்று ஜார்ஜ் மேலும் குற்றம் சாட்டினார். இவரது கருத்து கேரளா அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Similar News