தி.மு.க'விலிருந்து பா.ஜ.க'வில் இணையவிருக்கும் முக்கிய புள்ளிகள் - நாளை கடலூரில் பா.ஜ.க'வின் ஸ்கெட்ச் என்ன?

கடலூரில் நாளை நடக்க உள்ள பா.ஜ.க போராட்டத்தில் முக்கியமான சில தி.மு.க புள்ளிகள் பா.ஜ.க'வில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-10-26 14:54 GMT

கடலூரில் நாளை நடக்க உள்ள பா.ஜ.க போராட்டத்தில் முக்கியமான சில தி.மு.க புள்ளிகள் பா.ஜ.க'வில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முழுக்க நாளை பா.ஜ.க சார்பில் ஆளும் தி.மு.க அரசு தமிழை அழித்து வருவதால் அதனை காக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தி.மு.க திட்டமிட்டு தமிழை அழிக்க முயற்சிக்கிறது என பா..ஜ.க'வினர் போராட இருக்கின்றனர். இதில் தமிழக முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நாளை கடலூர் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த கடலூர் போராட்டம் மிகப்பெரிய அளவில் செயல்பட உள்ளது, இந்த நிலையில் தான் இந்த போராட்டத்தில் தி.மு.க'வை சேர்ந்த முக்கியமான தலைவர்கள் பா.ஜ.க'வில் இணையுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் மாற்று காட்சிகளில் இருந்து இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதில் திமுகவைச் சேர்ந்த வடலூரை சேர்ந்த எஸ்.ஆர்.பாலு பா.ஜ.க'வில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபோக வேறு ஒரு முக்கியமான நிர்வாகி அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க'வில் இணைய உள்ளார். தி.மு.க நிர்வாகிகள் நாளை நடைபெறும் கடலூர் கூட்டத்தில் இணையும்பட்சத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Source - One India

Similar News