தி.மு.க அரசைக் கலைக்க பா.ஜ.க. சதி செய்கிறது - அலறித்துடிக்கும் அமைச்சர் கே.என்.நேரு!

Update: 2022-06-13 12:11 GMT

செங்கல்பட்டு நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க. அரசைக் கலைப்பதற்கு பா.ஜ.க. சதி திட்டம் போடுவதாக குற்றச்சாட்டு வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சனம் செய்த பா.ஜ.க. நிர்வாகி ஹெச்.ராஜா, கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறுகின்றார்.

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் எப்படியாவது தமிழகத்தில் ஜாதி கலவரத்தை உண்டு பண்ணி இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்குவதற்கு பா.ஜ.க. முயல்கிறது. சிறு பிரச்சனை என்றாலும் அதனை பூதாகரமாக மாற்றம் செய்து வருகிறது. அ.தி.மு.க. அமைதியாக இருப்பதால் அவர்கள் பெரியதாக காட்டி வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News