பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக உபியில் வெற்றி: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்படுகிறது.

Update: 2022-03-10 09:35 GMT

403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தனி பெருமான்மையுடன் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. பாஜகவின் மேல் வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

Tags:    

Similar News