வாக்குப்பதிவு அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு.!
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் அன்று 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதில், தினக்கூலி, ஒப்பந்தப்பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை நிறுவன பணியாளர்கள் என அனைவருக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை ஆற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.