"பாலியல் கொடுமைகள்.. பட்டப்பகலில் கொலை, கொள்ளை! தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது!" - ஓ.பி.எஸ் கண்டனம்!

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுகமைகள் மற்றும் பட்டப்பகலில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-02 06:11 GMT

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுகமைகள் மற்றும் பட்டப்பகலில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள் நிகழ்கிறது. தினமும் பட்டப் பகலில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அரசு அதிகாரிகள், காவல் துறையினர் திமுகவினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர். தினமும் திமுகவினரின் அராஜகம் தலை விரித்து ஆடுவதாக உள்ளது. பல முறை அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டியும் இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தடுக்கவில்லை.

இதனால் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து வருகிறது. எட்டு மாதமாக திமுக ஆட்சியில் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலே உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News