நாங்க தீர்மானம் போடப்போறோம் ! - நீட் தேர்வுக்கு எதிராக தம் கட்டும் மா.சுப்பிரமணியன் !

Breaking News.

Update: 2021-09-12 04:45 GMT

நீட் தேர்வு நீக்கப்படும் என தேர்தலில் வாக்குறுதி கொடுத்து இன்று நீட் தேர்வு நடைபெறும் வேளையில் நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரும்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "தமிழக அரசு விரும்பாத, தமிழக முதலமைச்சரின் மனதுக்கு ஒப்புதல் இல்லாத நிகழ்வாகத்தான் நீட் தேர்வு நடக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், சட்டமன்ற முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான 13ம் தேதி நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல, அந்த தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்" என தெரிவித்தார்.


Source - கலைஞர் செய்திகள்

Tags:    

Similar News