காங்கிரசை மூழ்கடிப்பதற்கு ஓய்வின்றி உழைக்கிறார் ராகுல்! - ம.பி. முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் கடும் விமர்சனம்!

காங்கிரஸை மூழ்கடிப்பதில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2021-09-30 02:38 GMT

காங்கிரஸை மூழ்கடிப்பதில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதி ஒன்றில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசியதாவது:

நல்ல நிலைமையில் போய் கொண்டிருந்த பஞ்சாப் ஆட்சிக்கு ராகுல் இடையூறு ஏற்படுத்தினார். நன்றாக ஆட்சி செய்து கொண்டிருந்த அமரிந்தர் சிங்கை நவ்ஜோத் சிங் சித்துவிற்காக பதவியிலிருந்து நீக்கினர். ஆனால் தற்போது சித்துவும் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓடிவிட்டார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Times Now


Tags:    

Similar News