ஆதீனங்கள் அரசுக்கு எதிராக பேசினால் அடக்கப்படுவீர்கள் - அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

Update: 2022-06-07 23:43 GMT

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயல்களுக்கு உரிய சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகிகளுக்கும் சில கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது. சிதம்பரம் நடராஜர் கோயில், பொது கோயில் என நீதிமன்றமே கூறியுள்ள நிலையில், சட்டப்படி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், தீட்சிதர்களின் செயல்களுக்கு சட்டப்படி வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்கின்ற தோற்றத்தை மதுரை ஆதீனம் முயற்சி செய்கின்றார். மதுரை ஆதீனம் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை பேசி வந்தால் அவருக்கு பல்வேறு வகைகளில் பதில் சொல்ல வேண்டி வரும் என அடக்கத்தோடு தெரியப்படுத்திக் கொள்கிறேன். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருப்பது ஒட்டுமொத்த ஆதீன மடங்களும் அதிர்ச்சியடைந்துள்ளது.

Source, Image Courtesy: News 7 Tamil

Tags:    

Similar News