மதுசூதனன் மனைவி மறைவு: முதலமைச்சர் இரங்கல்.!

ஜீவா மதுசூதனன் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2021-04-19 12:04 GMT

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது மனைவி ஜீவா மதுசூதனன் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுசூதனன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




 


இந்நிலையில், மதுசூதனன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கழக அவைத் தலைவர் மரியாதைக்குரிய திரு.மதுசூதனனின் மனைவி திருமதி.ஜீவா மதுசூதனன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.




 


திருமதி ஜீவா மதுசூதனனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Similar News