மேகதாது அணை விவகாரம்.. பிரதமரை சந்திக்க டெல்லி செல்லும் அனைத்துக்கட்சி குழு.!

கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Update: 2021-07-15 01:15 GMT

கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், அணை விவகாரம் பற்றி ஆலோசிப்பதற்காக கடந்த 12ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்படுகை மாநிலங்களிடம் அனுமதி பெறாமல், அணை பற்றிய எந்த ஒரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது.


மேலும், கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு எந்த ஒரு அனுமதிகளையும் வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்ற கூட்டத்தின் தீர்மானங்களை அனைத்து கட்சியினரும் டெல்லி சென்று, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சரிடம் நேரில் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

அதன்படி இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் டெல்லி செல்கின்றனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்திதது மேகதாது அணை கட்டுமானம் பற்றி பேசப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Similar News