கமலாலயத்தில் அண்ணாமலை அறை மீது நள்ளிரவில் 'பெட்ரோல் குண்டு' வீச்சு: போலீசார் குவிப்பு!

Update: 2022-02-10 01:23 GMT

சென்னை தி.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு நேரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பாஜக தலைமை அலுவலகத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்ததால் உயிருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மூன்று மது பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு குண்டுகள் வீசப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற கமலாலயத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் அதுவும், தலைவர் அண்ணாமலை அறையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News