கொரோனா தொற்றிலிருந்து மீண்ட அமைச்சர் காமராஜ்.!

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட அமைச்சர் காமராஜ்.!

Update: 2021-02-03 17:14 GMT

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அமைச்சர் காமராஜ் குணமடைந்துள்ளார். அவரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் 5ம் தேதி அமைச்சர் காமராஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியானது.

ஆரம்ப கட்டத்தில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கையான சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் காமராஜரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். விரைவில் அவர் மக்கள் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News