பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு முதலிடம்: தாராபுரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம்.!

தாராபுரம் எப்போதுமே புரட்சித்தலைவி அம்மா மற்றும் எம்ஜிஆர் அவர்களின் கோட்டையாக இருக்கும்.

Update: 2021-03-26 12:02 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகனை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரித்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவரும், சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான எல்.முருகன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.


 



இதனிடையே, இன்று தாராபுரம் தொகுதியில் எல்.முருகனுக்கு ஆதரவாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் தாராபுரம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற பிரச்சாரத்தில் அமைச்சர் பேசியதாவது: தாராபுரம் மிக முக்கியமான தொகுதியாக மாறியுள்ளது. தாராபுரம் எப்போதுமே புரட்சித்தலைவி அம்மா மற்றும் எம்ஜிஆர் அவர்களின் கோட்டையாக இருக்கும். இந்த தொகுதியில் நாமும் வெற்றி பெற்றிருக்கிறோம். பாமகவும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது எல்.முருகன் பாஜக வேட்பாளராக தாராபுரத்தில் போட்டியிடுகிறார்.




 


அவர் மிகவும் எளிமையானவர், எளிதில் அனைவரிடமும் பழகக்கூடியவர். எல்லோருக்கும் உரிய மரியாதையை கொடுப்பதில் வல்லவர். விஐபி தொகுதியாக இருந்தாலும், அவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.


 



எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என கூறினார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் போன்று யாராலும் பொய் சொல்ல முடியாது. வாயை தொறந்தாலே பொய்தான். உலகிலேயே அதிகமான பொய் பேசுபவர்கள் யார் என்று கேட்டால் ஸ்டாலின் மட்டுமே என்றார்.

Similar News