கந்தர்வகோட்டையில் புதிய உராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.!

கந்தர்வகோட்டையில் புதிய உராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.!

Update: 2021-02-19 12:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இதன் பின்னர் அவர் மேடையில் பேசியதாவது: கந்தர்வக்கோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு ஏற்கனவே அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தர்வகோட்டை மக்களுக்கு நாங்களும் இந்த அரசும் என்றைக்கும் நன்றியோடு இருப்போம். இந்த மண் குளிர்விக்கின்ற வகையிலே அம்மாவின் அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கந்தர்வக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி, பேருந்து நிலையம், போன்ற நல்ல திட்டங்களை கொண்டு வந்தது அம்மாவின் அரசு.

காவிரி, வைகை குண்டாறு திட்டத்தினால் கந்தர்வகோட்டை தொகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெற்றுள்ளனர். விரைவில் நல்ல முன்னேற்றமான வாழ்க்கை கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Similar News