எடப்பாடி குறித்த அவதூறு வழக்கு 3 முறை ஆஜராகாத காரணத்தினால் மீண்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு சம்மன் !

சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக 3 முறை சம்மன் அனுப்பியும் முதல்வர் ஸ்டாலின் ஆஜராகவில்லை.

Update: 2021-08-11 23:30 GMT

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஆகஸ்ட் 16'ம் தேதி நேரில் ஆஜராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக 3 முறை சம்மன் அனுப்பியும் முதல்வர் ஸ்டாலின் ஆஜராகவில்லை.

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப வேண்டும் எனவும் ஆகஸ்ட் 16ம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Source - Asianet News

Tags:    

Similar News