ஒன்றாக அமர்ந்த ஸ்டாலின், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி !

இதனை தொடர்ந்து மதுசூதனன் வீடு அமைந்துள்ள தண்டையார்பேட்டைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 8.15 மணிக்கு வருகை புரிந்தார். அப்போது மதுசூதனன் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2021-08-06 05:14 GMT

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் நேற்று (5ம் தேதி) காலமானார். அவரது உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து மதுசூதனன் வீடு அமைந்துள்ள தண்டையார்பேட்டைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 8.15 மணிக்கு வருகை புரிந்தார். அப்போது மதுசூதனன் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர். இதன் பின்னர் அருகாமையில் அமர்ந்து இருந்தனர். சில நிமிடங்கள் கழித்து ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அதிமுக, திமுக தொண்டர்கள் ஒருவருக்கு ஒருவர்கள் எதிரிகளாக பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தலைவர்கள் ஒன்றாக துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: Dinamalar

Image Courtesy: Admk

https://www.dinamalar.com/news_detail.asp?id=2817589

Tags:    

Similar News