அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் கூட்டம், கூட்டமாக இணைந்த ரஜினி ரசிகர்கள்!

Update: 2022-06-16 11:55 GMT

தஞ்சாவூர் ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் உட்பட 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி என்பவர் பா.ஜ.க.வில் ஒரு தொண்டன். அவர் பிரதமராக வேலை செய்கிறார். தாய் மொழி, கலாச்சாரம் எல்லாவற்றையும் தாண்டி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் மக்கள் பா.ஜ.க.வை நேசிக்கின்றனர்.

எனவே அவரவர் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். அனைவரும் தேசியவாதியாக இருக்க வேண்டும். ஆன்மீக அரசியல் என்பது இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தையோ சார்ந்தது அல்ல. ஆன்மீக அரசியல் என்பது எதிலும் பற்று இன்றி இருக்க வேண்டும். அதுவே ஆன்மீக அரசியல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twitter

Tags:    

Similar News