"எவராயினும் கட்சிப் பாகுபாடின்றி அவர்களை கைது செய்ய வேண்டும் " மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிரடி ! கூட்டணையில் விரிசலா ?

Update: 2021-10-11 08:04 GMT

கடலூர் முந்திரி ஆலை பா.ம.க நிர்வாகி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடலூர் எம்.பி ரமேஷை  கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது" கொலை வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி , எவராயினும் கட்சிப் பாகுபாடின்றி அவர்களை கைது செய்ய வேண்டும் "என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே திமுக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தவறு செய்ததை சுட்டிக்காட்டி, அவரை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கூறியது கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News J

Tags:    

Similar News