என் அரசியல் அனுபவம்தான் உதயநிதியின் வயது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!

என் அரசியல் அனுபவம்தான் உதயநிதியின் வயது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!

Update: 2021-02-18 12:45 GMT

என்னுடைய அரசியல் அனுபவம்தான் உதயநிதியின் வயது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரச்சார பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் தொடர்ந்து வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கோவை என்று சுழன்று வருகிறார்.

இதனிடையே 6வது கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் இன்று திருநெல்வேலி மற்றும் தென்காசியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், திருநெல்வேலி வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அப்போது அவர் பேசும்போது: தமிழக மக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் மனு வாங்குவது மக்களை ஏமாற்றும் நாடகம். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திண்ணைப் பிரச்சாரம் மூலம் ஸ்டாலின் பெற்ற மனுக்கள் எங்கே போனது? தேர்தல் வந்தால் நாடகமாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மேலும், என்னுடைய அரசியல் அனுபவம்தான் உதயநிதியின் வயது. ஆனால் அவர் அதிமுகவை பற்றி விமர்சனம் செய்கிறார். இவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என பேசினார்.

Similar News