தாவூத் இப்ராஹிம் உடன் சேர்ந்து பணமோசடி: மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் அதிரடி கைது!

Update: 2022-02-23 12:32 GMT

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் சேர்ந்து சட்டவிரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக ஆஜராகும்படி நவாப் மாலிக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் நவாப் மாலிக் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடரந்து அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை மகாராஷ்டிரா அரசு உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், நவாப் மாலிக்கை மத்திய அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பண மோசடி தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சர் கைது செய்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவாப் மாலிக் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News