"நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் வச்சுருந்தீங்களே எங்க அது ?" - தி.மு.க அரசிற்கு எடப்பாடி கேள்வி !

EPS Criticized DMK Government.

Update: 2021-09-12 06:15 GMT

"நீட் தேர்வுக்கு ரகசியம் வைத்திருந்தீர்களே அது எங்கே?" என ஆளும் தி.மு.க அரசிற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கும் நிலையில் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இதனைகுறிப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் தி.மு.க அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?

ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.





 


Tags:    

Similar News