திருநெல்வேலி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சூறாவளி பிரசாரம்.!

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

Update: 2021-03-25 06:21 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான நாட்களும் குறைவாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.


 



இன்று காலை முதல் திருநெல்வேலி மேற்கு பகுதியான பேட்டை செக்கடி, திருத்து மலையாள மேடு, குரங்கு மடம், செட்டியார் பச்சேரி, வீரபாகு நகர் ஆகிய இடங்களில் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

அவருடன் அதிமுக, பாமக, தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று தாமரைக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Similar News