வரலாற்றை அழிக்கும் வேலையை தி.மு.க செய்கிறது.. இந்து முன்னணி குற்றச்சாட்டு..

Update: 2024-06-12 14:07 GMT

தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வில் மதம் தொடர்பாக இடம்பெற்றுள்ள கேள்விக்கு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் கூறும் போது, கடந்த ஜூன் 9ம் தேதி குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. வினாத்தாளில் முதல் கேள்வியே, இயேசு கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்? என்று கேட்கப்பட்டுள்ளது. இவ்வினாவுக்கு, கிறிஸ்துவர்கள் மட்டுமே சரியான விடையை தேர்வு  செய்வார்கள். மற்றவர்களால் அவ்வளவு சுலபமாக பதில் அளிக்க முடியாது.  


இதனால், இந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் நோக்கத்தில், வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளதோ? என எண்ணத் தோன்றுகிறது. இந்த வினா, தமிழ் மொழி பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி சார்ந்த ஆயிரமாயிரம் பண்டைய நுால்கள் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உள்ளன. அவற்றை புறந்தள்ளி, கிறிஸ்துவ மதம் சார்ந்த பாடங்கள் மற்றும் திராவிட புரட்டுக்கள் பாடங்களாக சேர்க்கப்பட்டு, வரலாற்றை அழிக்கும் வேலையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு செய்து வருகிறது.


குறிப்பாக போட்டி தேர்வுகளில் இத்தகைய ஒரு மதம் சார்ந்த கேள்விகளை எழுப்புவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, தி.மு.க அரசு சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, தமிழர்களின் அடையாளத்தை, பண்பாட்டை அழிக்கும் விதமாக செயல்பட கூடாது. மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்க கூடாது. நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும். என இந்து முன்னணி மாநில தலைவர் கூறியுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News