"அடுத்தவர்களை விமர்சிப்பதற்கான தகுதியும் நேர்மையும், துளியும் இல்லாத அரசு தி.மு.க அரசு"- வறுத்தெடுத்த சீமான்!

திமுக அரசுக்கு மற்றவர்களை விமர்சிப்பதற்கான தகுதியும் நேர்மையும் கொஞ்சமும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2024-07-14 16:57 GMT

நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்றுக் கொடுப்பதற்கும் அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும் நேர்மையும் தி.மு.க.விற்கு இல்லை என நா.த.க  ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது :-

அவதூறு பேசுவது , அசிங்கமான அரசியல் பேசுவது , இவற்றின் ஆதி தாய் தி.மு.க தான். ஒவ்வொரு தலைவர்களை பற்றியும் கருணாநிதி பேசியுள்ளார். கருவாட்டுக்காரியின் சீமந்த புத்திரர், மரமேறி , கட்டப்பீடி என விமர்சித்துள்ளார் .இழிவாக பேசுவதற்கு திமுக ஆட்களை வைத்துள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் மாற்று கட்சி பெண்களை இழிவாக பேசுகின்றன. நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்றுக் கொடுப்பதற்கும் அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும் நேர்மையும் திமுகவிற்கு இல்லை .

சண்டாளன் என்ற சமூகம் இருப்பது எங்களுக்கு தெரியாது. சண்டாளன் என கிராமங்களில் இயல்பாக பேசுவர். சினிமா படங்களில் பாடல்கள் வந்துள்ளன. சங்க இலக்கியங்கள், மந்திரங்கள் , கந்த சஷ்டியில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதி அதிகமாக பயன்படுத்தி உள்ளார். சண்டாளன் என நாங்கள் பாடவில்லை. அதை எழுதி வெளியிட்டது அதிமுக. அப்போது எங்கு சென்றீர்கள் ? காதில் பஞ்சை வைத்து படுத்து கொண்டீர்களா? இவ்வாறு சீமான் கூறினார். 


SOURCE :News

Tags:    

Similar News