இமானுவேல் சேகரன் குரு பூஜையில் திமுக மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸ்: பாதுகாப்பே இல்லை என்று ஒரே போடாக போட்ட செல்வபெருந்தகை!

Update: 2024-09-11 13:30 GMT

விசிகே தலைவர் திருமாவளவன் தனது கூட்டணிக் கட்சியான திமுக மீது பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் கூட்டணி கட்சி மீது அதிருப்தி தெரிவித்துள்ளது. தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூஜையின் போது போதிய பாதுகாப்பு கொடுக்காத திமுக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார் . 

தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள நினைவிடத்திற்கு கணிசமான அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், நினைவிடத்திற்கு போதிய பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார் . மதுரை மற்றும் சிவகங்கையில் பாதுகாப்பு திருப்திகரமாக இருந்தபோதும், ராமநாதபுரத்தில் பாதுகாப்பு குறைவாக இருந்ததை சுட்டிக்காட்டிய செல்வப்பெருந்தகை, ராமநாதபுரம் காவல்துறையின் நிர்வாகத்தை மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறுகையில், மதுரை மாவட்டத்தில் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு, சிவகங்கையிலும் போதிய பாதுகாப்பு அளித்து அழைத்து வந்தனர். ஆனால், ராமநாதபுரத்தில் பாதுகாப்புடன் நமது எம்.பி.க்களும், தலைவர்களும் நடத்தப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ராமநாதபுரம் காவல் துறை ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது என்பதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் கட்டுப்பாட்டுடன் வந்தோம், அதனால் எந்த பிரச்சனையும் அங்கு இல்லை. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் வரும்போது ராமநாதபுரத்தில் காவல் கண்காணிப்பாளர் ஒழுங்குபடுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால் அங்கு பிரச்சனை ஏற்படவில்லை ஆனால்,  கட்டுப்பாட்டின்மை மோதலுக்கு வழிவகுக்கும் பட்சத்தில் யார் பொறுப்பேற்பார்கள் என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது. எனவே, ராமநாதபுரம் காவல் துறை எதிர்காலத்தில் திறம்பட செயல்பட வேண்டும். எங்களை அங்கும் இங்குமாக நிறுத்துவதும், தலைவர்களை சிறையில் அடைப்பது போல் தடுத்து வைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தார். 

மேலும், குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்தால், நீங்கள் (திமுக) உங்கள் கட்டுப்பாட்டில்தான் நடத்த வேண்டும். அனாதைகள் போல் வந்து போக வேண்டுமா? என்று திமுகவை தாக்கி பேசினார். பின்னர், வெளிப்படையான விரக்தியுடன், பாதுகாப்பு இல்லை என்று திமுக அரசின் மீது அதிருப்தி தெரிவித்தார். 

இது திமுக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி கட்சிகளுடன் இது போன்ற அதிருப்திகள் தொடர்ந்து எழுந்து வந்தால் தேர்தல் சமயத்தை கூட்டணியிடையே பெரும் பிரச்சனை ஏற்படும் என்பதால் அறிவாலய தலைமை தற்போது விழிபிதுங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

Tags:    

Similar News