தென்னிந்தியாவில் தொடரும் வட இந்திய தொழிலாளர்கள் மீதான தாக்குதல்...வன்முறையாக மாறும் வாய்மொழி தாக்குதல்...!

Update: 2024-09-21 16:15 GMT

செப்டம்பர் 17ஆம் தேதி அதிகாலை திருச்சி அருகே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் வட இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் மனைவியின் முன்னால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். பயணிகள் போலீஸாருக்குத் தகவல் அளித்தும் எந்த அதிகாரியும் திருச்சி பேருந்து நிலையத்திற்கு வராமல் தாக்கியவரை தப்பிக்க அனுமதித்துள்ளனர். 

செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு, நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து தனது பயணத்தைத் தொடங்கியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கரூர் பேருந்து நிலையத்தில் வடமாநிலத் தம்பதிகள் பேருந்தில் ஏறினர்.அவர்களைத் தொடர்ந்து போதையில் இருந்த ஒருவரும் அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டனர். தம்பதியினர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்ததும், குடிபோதையில் இருந்த நபர் எந்த ஆத்திரமூட்டலும் இல்லாமல் அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்தவும், துஷ்பிரயோகம் செய்யவும் தொடங்கினார், இறுதியில் உடல் ரீதியாகத் தாக்கினார்.

அதிகாரிகளை ஈடுபடுத்த சக பயணிகள் முயற்சித்த போதிலும், திருச்சி பேருந்து நிலையத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார். இச்சம்பவத்தால் அவரது மனைவி, திகிலடைந்தார், அழத் தொடங்கினார் மற்றும் தாக்கியவரை நிறுத்துமாறு கெஞ்சினார், மேலும் மற்ற பயணிகள் தலையிட்டு, தாக்கியவரை அடக்கினார், இருப்பினும் மற்ற பயணிகள் அவரை இழுக்கும் வரை தாக்குதல் தொடர்ந்தது. குடிபோதையில் இருந்த நபர், சக பயணிகளை தனது செயகளால்  மிரட்டினார். 

இந்த சம்பவத்தின் வீடியோ, யூடியூப்பில் வெளியிடப்பட்டது, பின்னர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவை கருத்துப் பிரிவு தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர். பலர் குற்றவாளிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருகின்றனர்.

அபு தாஹிர் என்ற முகநூல் பயன்பாட்டாளர், இவர்களைப் போன்றவர்களால், பிற மாநிலங்களில் பணிபுரியும் தமிழ் மக்கள் பிச்சினைகளை எதிர்கொள்கின்றனர்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றவர்கள் காவல்துறையின் செயலற்ற பதிலை விமர்சித்தனர், பயனர் வெங்கட் தாக்கியவரைப் பிடிக்க எந்த அதிகாரிகளும் பேருந்து நிலையத்திற்கு வராதது "வெட்கத்திற்குரிய விஷயம்" என்று கூறினார்.

தென்னிந்தியாவில் வட இந்திய இந்துக்களை குறிவைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம், ராமேஸ்வரம் கோவிலுக்குள் வட இந்தியாவைச் சேர்ந்த இந்து பக்தர் ஒருவர் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களால் தாக்கப்பட்டார். இதேபோல், மார்ச் மாதம், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷிப்ரா பதக், தனது குடும்பத்தினருடன் புனித யாத்திரை சென்றபோது பரமக்குடி அருகே துன்புறுத்தப்பட்டதாகவும், தகப்பட்டதாகவும் கூறினார். 


டிசம்பரில், ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐயப்ப பக்தர்களுக்கும் தனியார் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, இரண்டு ஆந்திரப் பக்தர்களும் மூன்று காவலர்களும் காயமடைந்தனர். கடந்த மாதம், பெங்களூருவில், வட இந்தியப் பெண் ஒருவரை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் தாக்கியது, தேசிய அளவில் பரவலான சீற்றத்தை ஏற்படுத்தியது. இதேபோன்ற ஒரு சம்பவத்தில், திருச்சி அருகே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்து மீது காரணமின்றி வடமாநில இந்து ஒருவர் சமீபத்தில் தாக்கப்பட்டார். மற்ற பயணிகள் புகார் அளித்தப்போதிலும், குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய போலீசார் தவறிவிட்டனர், இதனால் அவரால் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓட முடிந்தது. 

இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளத்தில் பல விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்து வருகிற நிலையில், சில திராவிட மற்றும் தமிழ் தேசியவாத குழுக்கள் வட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வாய்மொழியாக குறிவைத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது திமுக அமைச்சர்களான க.பொன்முடி, எம்.பி., தயாநிதி மாறன், முன்னாள் எம்.பி.க்கள் செந்தில்குமார், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வட இந்தியர்களை "பானி பூரி வாலாக்கள்", "கழிவறையை சுத்தம் செய்யத் தகுந்தவர்கள்", "பான் மெல்லுபவர்கள்" என்று இழிவாகப் பேசினர். இப்படித்தான் வட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான வாய்மொழி விரோதமாக ஆரம்பித்தது, இது தற்பொழுது உடல் ரீதியான வன்முறையாக மாறுவது போல் தோன்றுகிறது, அதற்கான ஒரு வருத்தத்தக்க எடுத்துக்காட்டு தான் அரசு பேருந்தில் வட இந்திய புலம் பெயர்ந்து தொழிலாளி தன் மனைவி முன்பு குடிபோதையில் இருந்தவரால் தாக்கப்பட்ட சம்பவம்! 

Tags:    

Similar News