பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் நடந்து கொண்டுள்ளது கடந்த ஆண்டு வேட்டி நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் கிலோ ரூபாய் 320 வரை விற்கப்படும் பருத்தி நூலைக் குறைவாகவும் அதில் பாதி விலையான ரூபாய் 160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலை அதிகமாகவும் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றியதை தமிழக பாஜக சார்பாக, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் என்பதைக் கண்டறிந்து உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை தமிழக பாஜக சார்பில் வெளியிட்டோம்
கூட்டுறவு சங்கங்கள் தரமான வேட்டிகளை அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் கடந்த 06.02.2025 அன்று நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பவில்லை என்றால் இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும் விரைவுக் தெரிவித்திருக்கிறார் குறிப்பாணை மூலம்
ஆனால் கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில் தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி தான் செய்யும் ஊழலுக்கு ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் அவர்கள் தடையாக இருக்கிறார் என்பது தெரிந்ததும் அடுத்த இரண்டு நாட்களில் நேற்று 9 பிப்ரவரி 2025 அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர் காந்தி இனியும் கைத்தறித் துறை அமைச்சராக நீடிக்கக் கூடாது உடனடியாக அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்
வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில் காந்தியே முதல் நபராக இருப்பார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தொடர்ந்து அரசு வழங்கும் வெட்டி சேலைகளில் நடக்கும் ஊழலிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்