தமிழகத்தில் ஏப்பம் விடப்பட்ட ஐசிடி படிப்பிற்கு கொடுக்கப்பட்ட மத்திய அரசின் நிதி!அண்ணாமலை கேள்வி!

Update: 2025-03-16 17:35 GMT
தமிழகத்தில் ஏப்பம் விடப்பட்ட ஐசிடி படிப்பிற்கு கொடுக்கப்பட்ட மத்திய அரசின் நிதி!அண்ணாமலை கேள்வி!

மத்திய அரசுக்கும் தமிழக அரசிற்கும் தொடர்ச்சியாக கல்விக் கொள்கையில் உரசல் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது தமிழகத்திலும் தேசிய கல்வி கொள்கை வந்தால் என்ன என்ற அளவிற்கு மக்களின் மனநிலை உள்ள நிலையில் ஹிந்தி திணிப்பு என்ற ஒரே வார்த்தையை மட்டும் மீண்டும் மீண்டும் திமுக அரசு கூறிக்கொணடுள்ளது 

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எங்களின் மூன்றாவது மொழி அறிவியல் மொழிதான் என தலைப்பிட்டு ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் 

இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் (ICT) பாடத்தினைக் கற்றுக் கொடுக்க மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டுவிட்டு வாட்சப்பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரே?அண்டை மாநிலமான கேரளாவில் ICT பாடத்திட்டம் தமிழ் உட்பட மும்மொழிகளில் கற்பிக்கப்படுகிறது ஆனால் தமிழகத்தில் வெறும் வாய்ப் பேச்சு மட்டும் தான் செயலில் ஒன்றும் இல்லை

உங்க மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம் ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள் மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே?என்ன நியாயம் இது? என கேள்வி எழுப்பியுள்ளார்

Tags:    

Similar News