பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம் வந்துவிட்டது: பிரதமர் மோடி சூளுரை!
பீகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் அதில் பேசியவர், பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலால் நாடி கொந்தளிக்கிறது கார்கில் முதல் குமரி வரை வாழும் மக்கள் துக்கப்படுகிறோம் பயங்கரவாதிகளை கட்டாயம் தண்டிப்போம் நாட்டில் பயங்கரவாதத்தை மொத்தமாக வேரறுப்போம்
இந்த தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதிகளுக்கு கனவிலும் நினைத்திராத அளவிற்கு தண்டனை கொடுக்கப்படும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம் பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும் அவர்களுக்கு உதவியவர்களையும் இந்தியா கண்டறியும் அவர்களுக்கான உரிய தண்டனையும் வழங்கிய தீரும் என கூறியுள்ளார்
மேலும் பேசிய அவர் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா ஒருபோதும் துவண்டு போகாது அவர்கள் கனவிலும் நினைத்திடாது தண்டனை கொடுக்கப்படும் உலகின் எந்த மூலையிலும் காஷ்மீரின் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து வேட்டையாடுவோம், இன்று பீகார் மண்ணில் இருந்து இந்த உலகத்துக்கு சொல்கிறேன் பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம் வந்துவிட்டது என சூளுரைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி