முளைக்காத நெல் விதையை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றிய தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!
கோ-51 நெல் ரக விதைகள் 12 நாட்களாகியும் முளைக்கவில்லை என வேதனையடைந்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் வேறு எங்கேயும் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து, வரும் காலங்களில் விழிப்புணர்வோடு தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வற்புறுத்தியுள்ளார்.
கோ-51 நெல் ரக விதைகள் 12 நாட்களாகியும் முளைக்கவில்லை என வேதனையடைந்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் வேறு எங்கேயும் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து, வரும் காலங்களில் விழிப்புணர்வோடு தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு அம்மாவின் அரசு கடந்த ஆண்டு குறித்த நாளில், அதாவது ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டதைத் தொடர்ந்து டெல்டா விவசாயிகள் வேளாண் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு பயனடைந்துள்ளனர். அது போல இந்த ஆண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு டெல்டா மாவட்ட விவசாயிகள், விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்ந்த மாண்புமிகு அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள், உதவிகளை அளித்து வேளாண் பெருமக்களின் வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றியது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் முறைப்படுத்தும் குழு அமைத்து, 50 ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.
2) டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவிப்பு
3) குடிமராமத்து திட்டத்தில் சுமார் 1132 கோடி ரூபாயில் சுமார் 5,586 நீர் நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. மேலும் டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிவரை கால்வாய்கள் தூர் வாரப்பட்டதால், குறித்த காலத்திற்குள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாசன பரப்புகளுக்கும் காவேரி நீர் சென்றடைந்து விவசாயிகள் பயனடைந்தனர்.
4) தானே புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், சம்பா மற்றும் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு, பயிர்க் காப்பீடு என்று கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1 கோடியே 40 லட்சம் விவசாயிகளுக்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக அளிக்கப்பட்டது.