உங்க தேர்தல் வாக்குறுதி என்னாச்சு ? - ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பும் ஓ.பி.எஸ் !

Breaking News.

Update: 2021-09-20 23:45 GMT

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பி.எஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதி 124 நாட்கள் ஆன நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாதது பொதுமக்களிடையே மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. முந்தைய ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு, புதிய ஆளுநருக்கு அழுத்தம் தரமுடியாது என்ற சட்டத்துறை அமைச்சரின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.

எனவே, முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, தி.மு.க எம்பிக்கள் மூலம் மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எழுவர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்''என வலியுறுத்தியுள்ளார்.


Source - Asianet News

Tags:    

Similar News