ப.சிதம்பரத்தை எதிர்த்து கேள்வி கேட்ட நிர்வாகியை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியது !

Breaking News.

Update: 2021-09-14 10:15 GMT

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ப.சிதம்பரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கியுள்ளது காங்கிரஸ்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிகுறிச்சி கிராமத்தில் கடந்த 11ம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது பாண்டிவேலு என்பவர் காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்றார். இதனால் ப.சிதம்பரத்துடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு அப்பொறுப்பில் இருந்து நிரந்தரமாகவும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து தற்காலிகமாகவும் நீக்கப்பட்டுள்ளார். பாண்டி வேலுவிடம் விளக்கம் கேட்டும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News