அது எப்படி நீங்க மோடி பிறந்தநாளுக்கு 2 1/2 கோடி தடுப்பூசி போடலாம் ! - வயிற்றெரிச்சலில் புலம்பும் ப.சிதம்பரம் !

Breaking News.

Update: 2021-09-19 06:00 GMT

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இரண்டரை கோடி தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு கடும் வயிற்றெரிச்சலை கிளப்பியுள்ளது.

கடந்த 17'ம் தேதி நாடு முழுவதும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் இரண்டரை கோடி தடுப்பூசி போடப்பட்டது. வழக்கமாக தினமும் குறைந்தபட்சம் 50 லட்சம் பேருக்காவது மத்திய அரசால் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் தன் பிறந்தநாளுக்கு தேவையில்லாத கொண்டாட்டங்கள் இல்லாமல், ஏதேனும் காரணம் வைத்து கிரிமினல் கைதிகளை விடுதலை செய்யாமல் ஆக்கப்பூர்வமாக நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஆனால் நாட்டு மக்களுக்கு ஏதும் நன்மை பா.ஜ.க'வினால் நடந்தால் பொறுக்காத காங்கிரஸ் கட்சியில் இருந்து வழக்கம்போல் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, "17'ம் தேதி 2½ கோடி தடுப்பூசி போடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இதற்காக ஏன் மோடி பிறந்தநாள்வரை காத்திருக்க வேண்டும்?

தடுப்பூசி போடுவது என்பது பிறந்தநாளுக்கு 'கேக்' வெட்டுவது போன்றது அல்ல. தடுப்பூசி போடுவது ஒரு திட்டம். ஒரு தொடர் நடவடிக்கை. அதை பிறந்தநாளில் மட்டுமின்றி, தினந்தோறும் விரைவுபடுத்த வேண்டும்" என வயிற்றெரிச்சலுடன் கூறினார்.

தினமும் தடுப்பூசிகப் போடப்படும் நிலையில், இதுவரை கடந்த 10 நாளில் இரண்டு முறை ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போட்ட நிலையில் ப.சிதம்பரம் இதை கூறியுள்ளது பா.ஜ.க எதாவது நாட்டுக்கு நன்மை செய்தால் காங்கிரஸ் கட்சிக்கு அது பொறுக்காது என்பதையே காட்டுகிறது.


Source - Maalai malar

Tags:    

Similar News