ஸ்ரீரங்கத்தில் குங்குமத்தை அழித்த ஸ்டாலினுக்கு பெருமாள் நம்பிக்கை உண்டாம் - அப்பட்டமாக பொய் சொன்ன துர்கா ஸ்டாலின்
ஸ்ரீரங்கத்தில் குங்குமத்தை அழித்த ஸ்டாலினுக்கு பெருமாள் நம்பிக்கை உண்டாம் - அப்பட்டமாக பொய் சொன்ன துர்கா ஸ்டாலின்
இந்துக்கள் வாக்கு வங்கியால் தி.மு.க பலமான அடி வாங்கும் என இந்துக்களை விட தி.மு.க நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான் கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஈ.வே.ராமசாமியை தி.மு.க தூக்கி தூர வீசிவிட்டு வேலை தூக்கி நின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த தி.மு.க விழாவில் "என் மனைவி போகாத கோவிலே இல்லை" என்றார் ஸ்டாலின்.
பின் விராலிமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் "ஓடாமல் இருந்த விராலிமலை முருகன் கோவில் தேரோட்டத்தை நடத்திகாட்டியவர் என் தந்தை கருணாநிதி" என பெருமை பேசினார். திருத்தணியில் நடந்த தி.மு.க பிரச்சார கூட்டத்தில் முருகப்பெருமானின் வேலை கையில் ஏந்தி வாயெல்லாம் பல்லாக சிரித்தார் பிண்ணனியில் ப்ளக்ஸ்'ல் அண்ணாதுரையும், கருணாநிதியும் அதைவிட பலமாக புகைப்படத்தில் சிரித்தனர்.
தகப்பன் எட்டு அடி என்றால் மகன் பதினாறு அடி என்பது போல பிரச்சாரங்கள் செல்லும் இடத்தில் எல்லாம் இருக்கும் மடம், ஆதீனங்களுக்கு சென்று பவ்யமாக கைகட்டி நின்றார் உதயநிதி. திருவாடுதுறை ஆதீனத்தை சாஷ்டாங்கமாக குனிந்து வணங்கினார். ஜீயரிடத்தில் சடாரி மட்டும் வாங்கவில்லை பவ்யமெல்லாம் அதிகமாக இருந்தது தி.மு.க'வின் பட்டத்து இளவரசருக்கு.
பிரச்சார கூட்டத்தில் குடுத்த முருகப்பெருமானின் சிலை மற்றும் வேலை வாங்கி கிருபானந்த வாரியர் போன்று போஸ் குடுத்தார் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி. பின் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரிடம் பவ்யம் காட்டினார் சிகப்பு வேட்டி மட்டும் தான் இல்லை.
இவர்களை எல்லாம் மிஞ்சும் விதமாக கனிமொழி நெற்றியில் குங்குமத்தை கேமராவில் பளிச்' என தெரியுமாறு வைத்துக்கொண்டு வலம் வந்தார். இப்படி கருணாநிதி குடும்பமே காவடி எடுத்து அலகு குத்தாத குறையாக சுற்றியும் இந்துக்கள் மசிவதாக இல்லை என்பதை நன்கு உணர்ந்துள்ளனர் தி.மு.க'வினர் இருந்தாலும் விடுவார்களா பத்து வருட பசி ஆயிற்றே இன்னமும் விழுந்து பார்ப்போமே தற்பொழுது புதிய பிரச்சார யுக்தியாக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களை கோவில் பிரச்சாரத்தில் இறக்கியுள்ளனர் தி.மு.க'வினர்.