உங்களுக்கு ஏதேனும் ஸ்பிலிட் பர்ஸ்னாலிட்டி பாதிப்பா முதல்வரே? - ஸ்டாலினுக்கு S.G.சூர்யா கேள்வி!

குண்டு வீச்சு சம்பவம் காரணமாக பா.ஜ.கவின் மீது குற்றம் சாட்டும் முரசொலி நாளிதழில் செய்தி.

Update: 2022-09-26 10:25 GMT

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது இந்த பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து இருக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக தி.மு.க தலைமையிலான தமிழக ஆட்சியில் காவல் துறையினர் குற்றம் நடந்த நான்கு நாட்களுக்கு பிறகு தான் ஐந்தாவது நாட்களாக, SDPI அமைப்பைச் சேர்ந்த எட்டு பேரை குண்டு வீச்சு சம்பவம் எதிராக கைது செய்துள்ளது. 


தி.மு.கவின் ஆதரவு நாளிதழான முரசொலி நாளிதழ் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பா.ஜ.கவினர்தான் காரணமாக இருக்கலாம் என்ற நோக்கத்தில் செய்தியை வெளியிட்டு இருக்கின்றது இன்றைய நாளிதழில். ஆனால் இதை தி.மு.க அரசின் தலைமையிலான காவல்துறையினர் தான் SDPI அமைப்பைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்து இருக்கிறார்கள். பின்பு ஏன் இவர்கள் பா.ஜ.கவை குற்றம் சாட்டுகிறார்கள்? என்று பா.ஜ.க மாநில செயலாளர் SG.சூர்யா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.



இது பற்றி ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள SG.சூர்யா அவர்கள் கூறுகையில், தி.மு.க அரசு 8 SDPI கட்சியினரை பா.ஜ.க, RSS தலைவர்கள் மீது குண்டு வீசியதற்காக கைது செய்துள்ளது. ஆனால், தி.மு.க நாளேடான முரசொலி பா.ஜ.க-வினர் காரணமாக இருக்கலாமோ? என்று களங்கம் கற்பிக்கிறது. தங்களுக்கு Split Personality பாதிப்பு உள்ளதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என்றும் அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Twitter source

Tags:    

Similar News