பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வருகின்ற ஜூலை 5ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2021-06-28 12:46 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வருகின்ற ஜூலை 5ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.




 


இது பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


 



பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் ஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், கொரோனா தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் வரும் 5ம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Similar News