அனைவருக்கும் நீதி என்பதில் பா.ஜ.க. உறுதுதியாக உள்ளது - ஜே.பிநட்டா!

Update: 2022-06-13 12:10 GMT

மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டுவதில் கட்சிக்கு நம்பிக்கை இல்லை. அனைவருக்கும் நீதி வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது என அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

பா.ஜ.க. பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேபாளம், இங்கிலாந்து உள்ளிட்ட 13 நாடுகளின் தூதரகத் தலைவர்களுடன் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பா.ஜ.க.வின் வெளிநாட்டுப் பிரிவு பொறுப்பாளர் விஜய் சவுதைவாலே உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்போது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் மீதான கட்சியின் நடவடிக்கைகள் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய ஜே.பி.நட்டா, அனைத்து மதங்களையும் பா.ஜ.க. மதிக்கிறது. மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டுவதில் கட்சிக்கு நம்பிக்கை கிடையாது. அனைவருக்கும் ஒரே நீதி என்பதில் பா.ஜ.க. உறுதியுடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News