சசிகலாவுக்கு ஆதரவு போஸ்டர்! திருச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் அதிரடி நீக்கம்!

சசிகலாவுக்கு ஆதரவு போஸ்டர்! திருச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் அதிரடி நீக்கம்!

Update: 2021-01-29 17:30 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா விரைவில் தமிழகம் வருகிறார். அவர் வருகையை முன்னிட்டு அ.ம.மு.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் போஸ்டர் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அது போன்று திருச்சியில் போஸ்டர் அடித்து ஒட்டிய அ.தி.மு.க. பிரமுகர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அண்ணாதுரை அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி (மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதே போன்று நெல்லை மாவட்டத்தில் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க.வில் அதிரடி அறிவிப்புகளை சமீபகாலமாக முதலமைச்சர் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News